செய்திகள்
போராட்டம்

நிவாரணம் வழங்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Published On 2021-11-27 10:55 GMT   |   Update On 2021-11-27 10:55 GMT
அரியலூர் மாவட்டம் திருமானூரில் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் மழையால் சுமார் 100 ஏக்கருக்கும் மேலாக நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிந்துவிட்டன.

இவற்றுக்கு நிவாரணம் வழங்க கோரி, திருமானூர் ஒன்றியம் டெல்டா பகுதியான கீழக்கா வட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய வயல்வெளியில் இறங்கி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் விவசாயிகள் முத்து, உத்திராபதி, வளர்மதி, ஆனந்த், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில செயலாளர் அருளானந்தம், உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், நெற்பயிர்கள் பாதிப்புக்கு காரணமாக உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குந்தபுரம்கள்ளூர் சாலையில் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி தர வேண்டும் எனவும் மேலும் ஓடைகளை சரியான முறையில் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நெல் வயல்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி வைத்து விவசாயிகளை சந்தித்து ஆறுதல் படுத்திட வேண்டும் எனவும், முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News