செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
அசாம் மாநிலம் காச்சார் மாவட்டம் காந்திகாரம் தாலுகா கும்பூர் பக்கமுள்ள உத்தர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கவுரக்கா கோலா (வயது 55). இவர் ஓசூர் பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி கவுரக்கா கோலா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.