செய்திகள்
நகை பறிப்பு

மதுரை அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2021-11-20 13:25 GMT   |   Update On 2021-11-20 13:25 GMT
மதுரை அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கூடல்புதூர் சொக்கலிங்க நகரை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி மீனாட்சி (வயது 65). இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளனர். சம்பவத்தன்று காலை மீனாட்சி கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அதில் ஒருவன் கீழே இறங்கி மீனாட்சியிடம் சிகரெட் தருமாறு கேட்டுள்ளான். அப்போது அவர் திரும்பி சிகரெட்டை எடுக்கும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு அவன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். இது குறித்து மீனாட்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News