செய்திகள்
விபத்து பலி

கீழப்பழுவூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-11-06 18:23 IST   |   Update On 2021-11-06 18:23:00 IST
கீழப்பழுவூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த முத்தமிழ்செல்வனின் மகன் வெங்கடேசன்(வயது 28). இவரும், அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரும்(40) இருசக்கர வாகனத்தில் திருமானூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் வழியாக மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்தனர். அப்போது நிலைதடுமாறி சாலையில் இருந்த பதாகையில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News