செய்திகள்
கோப்புபடம்

மொரப்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

Published On 2021-11-03 13:56 GMT   |   Update On 2021-11-03 13:56 GMT
மொரப்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டையம்பட்டியை சேர்ந்த சண்முகம் (வயது 43), தொங்கனூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (60), மோட்டூரை சேர்ந்த சங்கர் (48), ,எம்.வேட்ரப்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (22) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News