செய்திகள்
விவசாயி பலி (கோப்பு படம்)

சோளிங்கர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

Published On 2021-10-30 18:29 IST   |   Update On 2021-10-30 18:29:00 IST
சோளிங்கர் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:

சோளிங்கரை அடுத்த பனவட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 50), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூங்காவனம் மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News