செய்திகள்
சிப்காட், லாலாபேட்டை, அம்மூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
சிப்காட், லாலாபேட்டை, அம்மூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை செயற் பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.