செய்திகள்
விபத்து பலி

கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் பலி

Published On 2021-10-26 13:45 GMT   |   Update On 2021-10-26 13:45 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள இலுப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 35), பெயிண்டர்.

திருவண்ணாமலையில் உள்ள உறவினரை பார்க்க நேற்று செந்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார். சம்மந்தனூர் கூட்ரோடு அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே சைக்கிளில் சென்றவர் மீது மோதாமல் இருக்க ‘பிரேக்’ போட்டுள்ளார். இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News