செய்திகள்
கைது

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது

Published On 2021-10-23 14:30 IST   |   Update On 2021-10-23 14:30:00 IST
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவிந்தபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜகுமாரி(வயது 48) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜகுமாரியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News