செய்திகள்
கோப்பு படம்

நாகூர் சில்லடி கடற்கரையில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Published On 2021-10-22 13:16 GMT   |   Update On 2021-10-22 13:16 GMT
நாகூர் சில்லடி கடற்கரையில் அடையாளம் தெரியாத முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

நாகூர் சில்லடி கடற்கரையில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News