செய்திகள்
கைது

பேனா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2021-10-15 10:34 GMT   |   Update On 2021-10-15 10:34 GMT
புதுவை ஆட்டுப்பட்டியில் பேனா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:

புதுவை அந்தோணியார் கோவில் அருகே உள்ள ஆட்டுப்பட்டி மெயின் ரோட்டில் நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேனா கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி கொண்டு இருந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து பேனா கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முனியன் என்பவரின் மகன் அரவிந்த் என்ற சக்திவேல் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News