செய்திகள்
கைது

பெண்ணை மானபங்கம் செய்த சமையல் தொழிலாளி கைது

Published On 2021-10-15 10:27 GMT   |   Update On 2021-10-15 10:27 GMT
கோட்டக்குப்பத்தில் பெண்ணை மானபங்கம் செய்த சமையல் தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரை திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
சேதராப்பட்டு:

கோட்டக்குப்பத்தை அடுத்த சின்ன முதலியார் சாவடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 38). கட்டிட வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று கஸ்தூரியை அதே பகுதியை சேர்ந்த திருமண மண்டபங்களுக்கு சமையல் செய்யும் தொழிலாளி வினோத் (24) என்பவர் வழிமறித்து அவரை கீழே தள்ளி மானபங்கம் செய்தார்.

இதுகுறித்து கஸ்தூரி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வினோத் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்தார். பின்னர் அவரை திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News