செய்திகள்
தொடர் விடுமுறை- புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புதுவையில் சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
புதுச்சேரி:
நவராத்திரி பண்டிகையை யொட்டி நாடு முழுவதும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் 19-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுமுறை உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
ஆயுதபூஜை முடிந்தவுடன் நேற்று மாலையிலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை மணல்பரப்பில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர்.
இதேபோல சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.
நவராத்திரி பண்டிகையை யொட்டி நாடு முழுவதும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் 19-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுமுறை உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
ஆயுதபூஜை முடிந்தவுடன் நேற்று மாலையிலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை மணல்பரப்பில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர்.
இதேபோல சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.