செய்திகள்
கைது

புதுவை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2021-10-10 13:51 GMT   |   Update On 2021-10-10 13:51 GMT
புதுவை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக பெரியகடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 38) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News