செய்திகள்
கைது

ஆற்காட்டில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

Published On 2021-10-03 13:36 GMT   |   Update On 2021-10-03 13:36 GMT
ஆற்காட்டில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காடு டவுன் போலீசார் மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை சேர்ந்த சதீஷ் (வயது 42), மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த ரஷித்அகமத் (24) என்பதும், இவர்கள் 2 பேரும் ஆற்காடு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ைகது செய்தனர்.
Tags:    

Similar News