செய்திகள்
சிவகாசி அருகே குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
சிவகாசி அருகே குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு பாண்டியன் (வயது 26), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாலினி.
கோவில் திருவிழாவின் போது இரவில் திருநாவுக்கரசு பாண்டியன் தனது சகோதரர் ராஜப்பனுடன் (23) மது அருந்தி உள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவரை மாலினி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் திருநாவுக்கரசு பாண்டியன் மனைவி மாலினியை தாக்கி விட்டு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார்.
இதற்கிடையில் ராஜப்பன் அங்கு வந்து அண்ணியிடம் தகராறு குறித்து விசாரித்துள்ளார். பின்னர் அண்ணனை பார்ப்பதற்காக அறைக்கு சென்றார்.
அங்கு திருநாவுக்கரசு பாண்டியன் தூக்கில் தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் திருநாவுக்கரசு பாண்டியன் இறந்து விட்டார்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு பாண்டியன் (வயது 26), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாலினி.
கோவில் திருவிழாவின் போது இரவில் திருநாவுக்கரசு பாண்டியன் தனது சகோதரர் ராஜப்பனுடன் (23) மது அருந்தி உள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவரை மாலினி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் திருநாவுக்கரசு பாண்டியன் மனைவி மாலினியை தாக்கி விட்டு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார்.
இதற்கிடையில் ராஜப்பன் அங்கு வந்து அண்ணியிடம் தகராறு குறித்து விசாரித்துள்ளார். பின்னர் அண்ணனை பார்ப்பதற்காக அறைக்கு சென்றார்.
அங்கு திருநாவுக்கரசு பாண்டியன் தூக்கில் தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உள்ளே சென்று காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் திருநாவுக்கரசு பாண்டியன் இறந்து விட்டார்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.