செய்திகள்
தற்கொலை

காரியாபட்டி அருகே முதியவர் தற்கொலை

Published On 2021-09-28 11:16 GMT   |   Update On 2021-09-28 11:16 GMT
காரியாபட்டி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பறையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 70). இவருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்றுவலி இருந்ததாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் வயிற்று வலி சரியாகாததால் விரக்தியடைந்த வெள்ளைச்சாமி பறையங்குளம் சுடுகாடு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக அவரது மகன் கணேசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த வெள்ளைச்சாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி வெள்ளைச்சாமி இறந்தார். இதுகுறித்து ஏ. முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News