செய்திகள்
கைது

அரக்கோணம் அருகே மண் கடத்தியவர் கைது

Published On 2021-09-28 09:09 GMT   |   Update On 2021-09-28 09:09 GMT
அரக்கோணம் அருகே மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மேல்ஆவதம் பகுதியில் அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் இருந்து டிராக்டரில் மண் எடுத்துச்சென்ற டிராக்டர் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மேல்ஆவதம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 46) என்பதும், மண் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, சசிகுமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News