செய்திகள்
கோப்புபடம்

சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-09-25 14:12 GMT   |   Update On 2021-09-25 14:12 GMT
சிவகாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:

திருத்தங்கல் போலீசார் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த முருகன்காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது54) என்பவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. 

அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி டவுன் போலீசார் விஸ்வநத்தம் பெரியார்காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28) என்பவர் கஞ்சா விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News