செய்திகள்
தளவாய்புரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி
தளவாய்புரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம்:
தளவாய்புரம் அருகே தேசிகாபுரம் விலக்கு சாலையில் நேற்று மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வாகனம் மோதி பலியான முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.