செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 111 பேர் பாதிப்பு

Published On 2021-09-21 12:43 GMT   |   Update On 2021-09-21 12:43 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 925 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 459 ஆக உயர்ந்தது. 1,252 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 563 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,240 பேர் உயிரிழந்துள்ளனர். 355 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News