செய்திகள்
கைது

ராஜபாளையம் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-09-20 11:54 GMT   |   Update On 2021-09-20 11:54 GMT
ராஜபாளையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுரை ரோட்டில் உள்ள டாஸ்மாக்கடையின் பின்புறம் அனுமதியின்றி மது விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கு மதுவிற்ற பெரியகடை பஜார் தெருவை சேர்ந்த செல்வக்குமார் மகன் சரவணன் (வயது 28) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 73 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் வேட்டை வெங்கடேசபெருமாள் கோவில் பகுதியில் மது விற்ற சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்த விநாயகம் மகன் ராஜகுரு (36) என்பவரிடம் 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்த தெற்கு போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News