செய்திகள்
நகை பறிப்பு

ஓசூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-09-19 13:13 GMT   |   Update On 2021-09-19 13:13 GMT
ஓசூரில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் அருகே சின்ன எலசகிரி அனுமந்த நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி வளர்மதி (வயது 59). சம்பவத்தன்று இவர் சின்ன எலசகிரி காமராஜ் காலனி பக்கமாக அரிசி மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து. கண் இமைக்கும் நேரத்தில், வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News