செய்திகள்
மரணம்

வில்லியனூர் அருகே திருமண மண்டப காவலாளி மயங்கி விழுந்து மரணம்

Published On 2021-09-19 11:31 GMT   |   Update On 2021-09-19 11:31 GMT
வில்லியனூர் அருகே திருமண மண்டப காவலாளி மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை அருகே தைலா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது55). இவரது முதல் மனைவி மாலதி இறந்து விட்டதால் 2-வதாக விஜயகுமாரி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக சுப்பிரமணி தனது 2-வது மனைவி மற்றும் மகள்களுடன் கூடப்பாக்கம் குளத்துமேட்டுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சுப்பிரமணி வழுதாவூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் சுப்பிரமணிய திடீரென மயங்கி பேச்சுமூச்சின்றி கிடந்தார். உடனே அதிர்ச்சியடைந்த அவரது மனைவி விஜயகுமாரி அருகில் உள்ள தனது சகோதரர் ராஜாவுக்கு போன் செய்து ஆம்புலன்சை வரவழைத்து கணவரை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சுப்பிரமணியின் மனைவி விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News