செய்திகள்
விபத்து பலி

மறைமலைநகர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி

Published On 2021-09-18 11:03 GMT   |   Update On 2021-09-18 11:03 GMT
மறைமலைநகர் அருகே வாகனம் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நெமிலி பகுதியை சேர்ந்தவர் எத்திராஜிலு (வயது 53), இவர் மீனம்பாக்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே எத்திராஜிலு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News