செய்திகள்
மின்சார நிறுத்தம்

சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-09-17 21:01 IST   |   Update On 2021-09-17 21:01:00 IST
சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே சிங்கம்புணரி மற்றும் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, செருதப்பட்டி, அரசினம்பட்டி, குமரிப்பட்டி, நாட்டார்மங்கலம், சதுர்வேதமங்கலம், அ.காளாப்பூர், கண்ணமங்களப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்து உள்ளார்.

Similar News