செய்திகள்
நகை பறிப்பு

திருப்பத்தூர் அருகே 7 பவுன் நகை பறிப்பு

Published On 2021-09-17 15:19 GMT   |   Update On 2021-09-17 15:19 GMT
திருப்பத்தூர் அருகே 7 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே தென்கரை கிளாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவருடைய மனைவி ரேவதி (வயது 32). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு வந்த சித்தியை புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டிக்கு மொபட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி ரோட்டில் வந்தபோது, சாத்தியனேந்தல் கண்மாய்கரை ரோட்டில் இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து ரேவதியை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து ரேவதி கீழச்சிவல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் துணை சூப்பிரண்டு, ஆத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News