செய்திகள்
மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்த மகாராஷ்டிர மந்திரி

மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்த மகாராஷ்டிர மந்திரி

Published On 2021-09-15 03:03 GMT   |   Update On 2021-09-15 03:03 GMT
மகாராஷ்டிர மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் அங்குஷ்ராவ் டோபிக்கு சிற்பிகள் கல்லில் வடிக்கப்பட்ட விநாயகர் சிலையை நினைவு பரிசாக வழங்கினர்.
மாமல்லபுரம்:

மகாராஷ்டிர மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் அங்குஷ்ராவ் டோபி நேற்று மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் அங்கு யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய புராதன சின்னங்களான பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களையும், குடைவரை கோவில்களையும் சுற்றி பார்த்து ரசித்தார். அவருக்கு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றியும், அவற்றை உருவாக்கிய பல்லவ மன்னர்களின் வரலாற்று கதைகளையும் சுற்றுலா வழிகாட்டிகளும், தொல்லியல் துறை அதிகாரிகளும் விளக்கி கூறினர்.

அதேபோல் ஐந்துரதம் பகுதியில் உள்ள சிற்ப கலை கூடங்களில் சிற்பிகள் வடிக்கும் கற்சிலைகளை பார்வையிட்டார். அவருக்கு சிற்பிகள் கல்லில் வடிக்கப்பட்ட விநாயகர் சிலையை நினைவு பரிசாக வழங்கினர். முன்னதாக மகாராஷ்டிர சுகாதார துறை மந்திரியை அர்ச்சுனன் தபசு அருகில் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
Tags:    

Similar News