செய்திகள்
ரங்கசாமி

புதுவை மேல்-சபை எம்.பி. பதவி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி

Published On 2021-09-11 11:07 GMT   |   Update On 2021-09-11 11:07 GMT
மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
புதுச்சேரி:

புதுவை மேல்-சபை எம்.பி.க்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடக்கிறது.

வருகிற 15-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

புதுவை மேல்-சபை எம்.பி. பதவி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News