செய்திகள்
தற்கொலை

ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-09-07 16:48 IST   |   Update On 2021-09-07 16:48:00 IST
ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பிளம்பர். கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருக்கும்போது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி, தாயார் இருவரும் அவரது உடலில் உள்ள தீயை அணைக்க முயன்றனர். அப்போது அவரது தாயும், மனைவியும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிளம்பர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய், மனைவி இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News