செய்திகள்
திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகை- பணம் திருட்டு

Published On 2021-08-23 16:17 IST   |   Update On 2021-08-23 16:17:00 IST
ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் மேலத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 74). விவசாயியான இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு கடந்த 19-ந் தேதி சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள 4 பீரோக்கள், 2 பெட்டிகள் ஆகியவையும் உடைக்கப்பட்டிருந்தன.

மேலும் அவற்றில் இருந்த 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாதநேரத்தில் யாரோ மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News