செய்திகள்
மீன்சுருட்டி அருகே சூதாடிய 8 பேர் கைது
மீன்சுருட்டி அருகே சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டபோது, மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடங்க நல்லூர் புளியந்தோப்பு கிராமத்தில் சிலர் சூதாடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது சுண்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பிரித்திவிராஜ்(வயது 30), துரைராஜ்(30), உத்திராபதி(36), கங்கவடங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலையா(52), தமிழ்நாதன்(47), சுந்தரவடிவேல்(40), மும்மூர்த்தி(30), கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(45) ஆகியோர் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர்.