செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் மரணம்
பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அதிகாலை ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். அவர் யார்? என தெரியாமல் இருந்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.
இதில் அவர் குன்னத்தூர் ரோடு அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 37) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அதிகாலை ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். அவர் யார்? என தெரியாமல் இருந்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.
இதில் அவர் குன்னத்தூர் ரோடு அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 37) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.