செய்திகள்
கைது

கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2021-08-16 15:56 IST   |   Update On 2021-08-16 15:56:00 IST
கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:

அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியலூர் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 2 சிறுவர்கள் சிறிய பொட்டலங்களில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, திருச்சியில் இருந்து செல்போன் கடைகளுக்கு உதிரிபாகங்கள் விற்பதற்கு வந்தபோது, கஞ்சாவும் கொண்டு வந்தது, தெரியவந்தது.

இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News