செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் சாலை விபத்தில் முதியவர் பலி
ஜெயங்கொண்டத்தில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 70). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கீழக்குடியிருப்பு கிராமம் பஸ் நிறுத்தத்தில் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சுந்தரேசன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் சம்பவஇடம் சென்று சுந்தரேசனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.