செய்திகள்
கைது

ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2021-08-14 17:43 IST   |   Update On 2021-08-14 17:43:00 IST
ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை போலீசார் தூர்வாசனூர் முனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய குட்டூர் சிலம்பரசன் (வயது 29), தூர்வாசனூர் பைரப்பன் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே போல பர்கூர் போலீசார் கீழ்வெங்கடாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரை சேர்ந்த ஜெயவேல் (40), காளியப்பன் (42), சரவணன் (45) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News