செய்திகள்
அபராதம்

சிவகிரி பகுதியில் முக கவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்

Published On 2021-08-14 15:43 IST   |   Update On 2021-08-14 15:43:00 IST
சிவகிரி பகுதியில் முக கவசம் அணியாமல் இருந்த 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சிவகிரி:

சிவகிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

அப்போது 7-ம் திருநாள் மண்டபம் அருகில் உள்ள பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து முககவசம் அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் மனோகரன் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

Similar News