செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஓசூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-08-13 14:41 IST   |   Update On 2021-08-13 14:41:00 IST
ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளியில் தனியார் கம்பெனி சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
மத்திகிரி:

ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளியில் தனியார் கம்பெனி சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதற்கு பூனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சாவித்திரியம்மா பைரப்பா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் என்.மஞ்சுநாதப்பா முன்னிலை வகித்தார். இதில் பூனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Similar News