செய்திகள்
தங்க சங்கிலி பறிப்பு

ஓசூரில் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2021-08-13 09:01 GMT   |   Update On 2021-08-13 09:01 GMT
ஓசூரில் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுனிதா (வயது 42). இவர் தும்மனப்பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை, ஓசூர்-பாகலூர் சாலையில், ஐ.டி. பார்க் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்தார். அப்போது சுமார் 35 வயதுள்ள நபர், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து சுனிதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்து சுனிதா கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News