செய்திகள்
ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம்-நகைகள் கொள்ளை
ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சத்திரப்பட்டி பிரதான சாலையில் உள்ள ஆர்.ஆர். நகரில் வசிப்பவர் ஆனந்த்குமார். இவரது வீட்டின் மாடியில் சசிக்குமார் என்பவர் மனைவி சாந்தியுடன் வாடகைக்கு இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று 2 குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் சசிக்குமார் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.
இதேபோல் ஆனந்த் குமார் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.17 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் இந்த திருட்டு பட்டப்பகலில் நடைபெற்றிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொள்ளை சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி பிரதான சாலையில் உள்ள ஆர்.ஆர். நகரில் வசிப்பவர் ஆனந்த்குமார். இவரது வீட்டின் மாடியில் சசிக்குமார் என்பவர் மனைவி சாந்தியுடன் வாடகைக்கு இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று 2 குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் சசிக்குமார் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.
இதேபோல் ஆனந்த் குமார் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.17 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் இந்த திருட்டு பட்டப்பகலில் நடைபெற்றிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொள்ளை சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.