செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா

Published On 2021-08-11 23:41 IST   |   Update On 2021-08-11 23:41:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 41 ஆயிரத்து 612 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று 30 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 967 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 321 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது.

Similar News