செய்திகள்
தற்கொலை

பந்தலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-08-10 20:40 IST   |   Update On 2021-08-10 20:40:00 IST
பந்தலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே அத்திசால் படிச்சேரி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். சேரம்பாடி வனச்சரகத்தில் வனக்காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சஞ்சய்(வயது 24). பி.காம். பட்டதாரி. இவர் அரசு மற்றும் தனியார் துறை வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சஞ்சய், விட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News