செய்திகள்
வழக்கு பதிவு

புகையிலை பொருட்கள் பறிமுதல்- கடை உரிமையாளர் மீது வழக்கு

Published On 2021-08-10 10:00 GMT   |   Update On 2021-08-10 10:00 GMT
பஸ் நிலையத்தில் ஒரு பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைவீதி மற்றும் பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது பஸ் நிலையத்தில் ஒரு பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் ஜெயக்குமார்(வயது 32) மீது வழக்குப்பதிந்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News