செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் தொழிலாளி பலி

Published On 2021-08-06 16:14 IST   |   Update On 2021-08-06 16:14:00 IST
மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:

சித்தோட்டை அடுத்த பேரோடு சி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் என்கிற லட்சுமணன் (வயது 43). தொழிலாளி. இவர் கங்காபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சி.மேட்டுப்பாளையம் கூட்டுறவு பால் சங்கம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி அங்கிருந்த மின்சார கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே வெங்கடாசலம் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News