செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-08-05 16:43 IST   |   Update On 2021-08-05 16:43:00 IST
வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது குறைவாக உள்ளதால் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. பாசனத்திற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் 15.60 கன அடியாக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 1 வாரமாக கீழணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை. ஆனால் தற்போது கீழணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரிக்கு 85 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது குறைவாக உள்ளதால் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஏரியின் நீர்மட்டம் 40 கன அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News