செய்திகள்
கோப்புபடம்

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபர் கைது

Published On 2021-08-01 14:15 IST   |   Update On 2021-08-01 14:15:00 IST
ஈரோடு அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபரை போலீசார் போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோடு:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 23). இவர் ஈரோடு அணைக்கட்டு ரோடு, கோழிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சக்திக்கு ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சக்தி சிறுமியுடன் நைசாக பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

இதையடுத்து சக்தி ஒரு மாத்திரையை வாங்கி கொடுத்து சிறுமியின் கருவை கலைத்து உள்ளார். இதனால் உடல் நலம் பாதித்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தனர்.

Similar News