செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

Published On 2021-07-31 12:36 GMT   |   Update On 2021-07-31 12:36 GMT
ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூலப்பட்டறை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு லாட்டரி சீட்டு விற்ற, மூலப்பட்டறை பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 43), கருங்கல்பாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (43), ஈரோடு மேட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (40), ஈரோட்டை சேர்ந்த ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 60 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News