செய்திகள்
கோப்புப்படம்

வரும் 30-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்

Published On 2021-07-28 16:16 IST   |   Update On 2021-07-28 16:16:00 IST
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ந் தேதி அன்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ந் தேதி அன்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News