செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகரில் மேலும் 17 பேருக்கு கொரோனா

Published On 2021-07-28 10:07 GMT   |   Update On 2021-07-28 10:07 GMT
விருதுநகர் மாவட்டத்தில் 244 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,437 உயர்ந்தது. இதுவரை 44,653 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளது. 196 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 19 பேர் சிகிச்சை மையங்களிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News