செய்திகள்
மாயம்

ஆலங்குடியில் இளம்பெண் மாயம் - போலீசார் விசாரணை

Published On 2021-07-27 17:11 IST   |   Update On 2021-07-27 17:11:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை கல்யாணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணன். இவர் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் மருந்து கடையில் வேலை செய்து வந்த எனது சகோதரி கவிதா(20), சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவை தேடிவருகின்றனர்.

Similar News